இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து உடல் நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார். இவரது உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது..

இவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஞ்ஞானி சு.முத்து விண்வெளி தொடர்பான பல்வேறு புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இதற்காக அவருக்கு சிறந்த நல்லாசிரியர் என்ற விருதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.