அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் கிராமத்தில் உள்ள வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்தை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கண்மாய் கரையில் வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அதேப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பிரபாகரனை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றபோது., பிரபாகரன் தலைமறைவாகி இருந்ததால் அவரது தந்தையை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அறிந்த அவர்., சக நண்பர்களுடன் சேர்ந்து வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்தை தாக்கி., பொருட்களை சேதப்படுத்திவிட்டு மீண்டும் தப்பி சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவலரிருந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையிலும் உதயகுமார் போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News