தலைநகர் சென்னையானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. பேருந்து வசதிகள் மின்சார இரயில் சேவை., பறக்கும் இரயில், மற்றும் மெட்ரோ சேவை என சென்னை தற்போது மாடன் சிட்டியாக மாறிக்கொண்டே வருகிறது. இப்படி இருக்கையில் சென்னையின் ஒரு மையப்பகுதியில் பேருந்து சேவை இல்லை எனவும்., ஆட்டோ, பைக் டேக்சி போன்றவை அதிக கட்டணம் கேட்பதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவற்றைப்பற்றி விரிவாக பார்க்கலாம்..
சென்னை ஓல்டு மகாபல்லிபுரம் சாலையில் (OMR) ஐடி நிறுவனங்கள்., அப்பார்ட்மெண்ட்ஸ், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், மற்றும் மருத்துவமனை, ஹோட்டல்ஸ் என அதிகரித்து கொண்டே இருப்பதால் பல தரப்பு மக்களுக்கு இங்கு குடியேறி வருகின்றனர். தற்போது மெட்ரோ இரயில் சேவைக்கான இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதால்., இந்த சோதனை ஓட்டங்கள் முடிந்துவிட்டால் இவையும் எளிதாகி விடும்.
இப்படி இருக்கையில் அந்த பகுதிகளில் போக்குவரத்து சேவை இல்லை என சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதாவது., சென்னை ஓ.எம்.ஆரில் அடையாறு, துரைப்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், படூர், கேளம்பாக்கம், சிறுசேரி, நாவலூர் மற்றும் கன்னத்தூர் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருவதாகவும் 18 வழித்தடங்களில் பேருந்து சேவையே இல்லை என கூறப்படுகிறது. முற்றிலுமாக மினி பேருந்து சேவை வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
OMR பகுதிகளிலும் ஐடி நிறுவனங்கள் அதிகம் காணப்படுவதால்., அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் பேருந்து சேவை இல்லாததால்., ஆட்டோ சேவை, பைக் டாக்சி போன்றவை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே பலதரப்பு மக்களின் கோரிக்கையாக இந்த 18 வழித்தடங்களுக்கும் பேருந்து சேவையை இயக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்..