கருப்பு பெட்டி மீட்பு..!! தீவிரமான ஆய்வு..!! 214 பேர் உயிர் இழப்பு..!!

அகமதாபாத் விமான விபத்தின் காரணம் கண்டறிய உதவும் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருப்பு பெட்டி :

கருப்பு பெட்டி என்பது ஒவ்வொரு விமானம் மற்றும் எலிக்காப்டரிலும் பொருத்தப்பட்டிற்கும் ஒரு கருவி. இவை விமானம் மற்றும் எலிக்காப்டரில் ஏற்படும் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை ஒளிபரப்பிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விமானத்தின் வால் பகுதியில் பொறுத்தப்பட்டிற்கும் இந்த கருவியானது. விமானிகள் மற்றும் ஊழியர்களின் உரையாடல், விமானம் செல்லும் வேகம், அவை பறந்து செல்லக்கூடிய உயரம் மற்றும் அவற்றின் காலநிலை என அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கும்.

இதனை கடந்த 1950ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டேவின்வாரன் என்பவர் இதனை கண்டுபிடித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருப்பு பெட்டியில், டைட்டானியம் மற்றும் உலோகங்கல் இருப்பதால் தீப்பற்றினாலும், இவை செயல்படும். இந்த கருப்பு பெட்டியில் மட்டுமே விபத்துகள் எவ்வாறு நிகழ்ந்தது என்ற தகவல்களை வெளிபரப்பும்.

அந்த வகையில், அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தற்போது இந்த கருப்பு பெட்டியானது ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான தகவல்களை ஆய்வு செய்யவே 10 -15 நாட்கள் தேவைப்படும் என ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதுவரையில் 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 37 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 214பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News