சிரஞ்சீவி நடிப்பில், அனில் ரவிபுடி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று, உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு, நடிகை நயன்தாராவிடம், சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.
கதையை கேட்டு முடித்த அவர், படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு 18 கோடி ரூபாயை சம்பளமாக வழங்க வேண்டும் என்று, நிபந்தனையை முன் வைத்திருக்கிறார்.
இவ்வளவு பெரிய தொகையை அவர் சம்பளமாக கேட்டிருப்பது, தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.