திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அய்யப்பன் (45) இவர் கட்டிட சென்றிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் 15 வயது மகள் மற்றும் மகன் ஆகியோர் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி புத்தாடை வெடி பணம் ஆகியவை வாங்குவதற்காக தந்தை ஐயப்பன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது மது போதையில் இருந்த ஐயப்பன் 15 வயதுடைய மகளை பாலியல் வன்புணர்வுக்கு துன்புறுத்தியுள்ளார்.
இதை கண்ட தம்பி தனது அம்மாவிடம் சொல்லி நன்னிலம் காவல் நிலையத்தில் தாய் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் தந்தை அய்யப்பனை கைது செய்தனர்.
பெற்ற மகளையே பாலியல் தொந்தரவுக்காக முயற்சி செய்த தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.