மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.