மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட 2,600 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பயணி ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகளை மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவுகள் அனைத்தையும் கடத்திக் கொண்டு வந்த பயணியிடமே வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.