திடீர் உடல்நலக் குறைவு…சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சவுக்கு சங்கர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் ஆத்தூர், அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் வெளியேறும்படி மருத்துவர்கள் கூறினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News