கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.பி. சண்முகசுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 98ஆம் ஆண்டு வரை கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம். இவர் திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சண்முகசுந்தரம் மறைவுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.