பூவிருந்தவல்லியில் சொத்திற்காக பெற்ற தந்தையை வேன் வைத்து இடித்து கொன்ற மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பூவிருந்தவல்லி அடுத்த பாரிவாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் இவருக்கு சொந்தமான 4 சென்ட் நிலம் உள்ளது. இதனை அவரது மகன் வெங்கடேசன் தனக்கு கொடுக்குமாறு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் தந்தை ராஜேந்திரனுக்கும் மகன் வெங்கடேசன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தான் ஓட்டும் வேனைக் கொண்டு ராஜேந்திரனை முட்டி தள்ளியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார்.
இதையடுத்து மகன் வெங்கடேசன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி காவல்துறையினர் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி உடல் கூறாய்விற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய வெங்கடேசனை தேடிவருகின்றனர்.
மேலும் மகன் வெங்கடேசன் திட்டமிட்டு வாகனத்தை கொண்டு இடித்து கொலை செய்தாரா அல்லது விபத்தாக நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.