சென்னையில் இனி அனைத்து பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்!

சென்னையில் இப்போது அனைத்து பேருந்துகளிலும் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர பேருந்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையில் உள்ள 22 டிப்போக்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இப்போது அனைத்து டெப்போக்களிலும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்கள் மூலம் யுபிஐ, கார்டு மற்றும் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இதற்காக நடத்துநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னை எம்டிசி பேருந்துகளில் பொதுமக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணிக்கலாம். சென்னை பேருந்துகளில் பயணிப்போர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்துகளில் பயணிக்கும் போது சிக்கல் ஏற்பட்டால் அல்லது இதில் சந்தேகங்களுக்கு 149 என்ற எண்ணைப் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்”

RELATED ARTICLES

Recent News