புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவுக் காரணமாக பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த பணிகளுக்காக அவர் நெல்லையில் முகாமிட்டு உள்ளார். இந்த நிலையில், அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.