சென்னை அணியியை வாங்கிய சூா்யா.! அதிா்ச்சியில் ரசிகா்கள்!

கடந்த சில காலங்களாக டி20 தொடா்களை போல், டி10 தொடா்களிலும் கிரிக்கெட் ரசிகா்களை தாண்டி பலரும் ஆா்வம் காட்டிவருகின்றனா்.
ஐஎஸ்பிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் எனும் இந்த டி10 தொடரானது, வருகிற மாா்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் 9 – ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.இந்த தொடரில் பல மாநிலங்களின் சென்னை , பெங்களூரு, ஹைதராபாத் , கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளனா்.

இதில் உள்ள ஒவ்வொரு அணியையும் திரைபிரபலங்கள் வாங்கி வருகின்றனா்.
அதன்படி, மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி உள்ளனர். இந்த வரிசையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

இதனை அவா் தனது டிவிட்டா் பக்கத்தில் ஷோ் செய்துள்ளாா். இதற்கு அவா் ரசிகா்கள் பலரும் வாழ்த்துகளையும் , தங்களின் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News