மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருந்திருக்கிறது.
சில இடங்களில் மழை நீர் வடியாமல் இருப்பதால் மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்த சூழலில் குடிநீருக்கும், பாலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சுமார் 2000க்கும் அதிகமான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருக்கின்றன. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.