இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி ஒரு கிலோ 150 ரூபாய்க்கு மேல் உச்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது . பின்னர் படிப்படியாக அதன் விலை குறைந்து தற்போது கிலோ ரூ. 10 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று விவசாயி ஒருவர் கரூர் – திருச்சி சாலை புலியூர் அருகே சாலை ஓரத்தில் சுமார் 30 கிலோ தக்காளியை கொட்டி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது தக்காளி சாகுபடி அதிகரித்ததால் விலையும் குறைந்துள்ளதால் பல்வேறு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.