பிரபல இந்தி மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகர் பவன் (25) வயதில் மாரடைப்பால் காலமானார்.
கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த பவன், நேற்று காலை 9 மணிக்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார்.
அவரது உடல் மண்டியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை மேற்கொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக பல இளம் நடிகர்கள் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.