கோவை மாநகரில் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் விஜயகுமார். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்று சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்ற அவர் கோவை சரக டி.ஐ.ஜி. ஆனார். கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவையில் பதவியேற்று பணியில் ஈடுபட்டு வந்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் .இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி,தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால், டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது வருத்தமளிக்கிறது. இது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியான செய்தி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அவரை பல முறை சந்தித்துள்ளேன். அவரது கடைசி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் ,டி.ஐ.ஜி. விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் .அவரின்,இறுதிச்சடங்குகள் தேனியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.