சென்னை எழும்பூரில் சிபிசிஐடி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம், மாநில காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மதியம் சிபிசிஐடி அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.

பிறகு திடீரென கட்டிடம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து எழும்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.