திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண்ணை கடத்தி வெளியே விற்பனை செய்யப்பட்டு வருவதாக வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தடுப்பதற்காக பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அங்கு வந்த நரசிங்கபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் பிரபாகரனை தாக்கியுள்ளனர். மேலும் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசியுள்ளனர். இதையடுத்து பிரபாகரனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி ஓட்டுனர் மணிகிருஷ்ணன்,தனபால் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஆர்.ஐ பிரபாகரன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இருந்து நீக்கம்
மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளரின் மண்டையை உடைத்த திருச்சி மாவட்டம், நரசிங்கபுரம் ஊராட்சி தலைவரை திமுகவில் இருந்து நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.