வருமான வரித்துறை அதிகாரிகள்.4 பேர் மருத்துவமனையில் அனுமதி?

தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். மேலும் கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் ரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீடு, அவரது நிறுவனம் மட்டும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வருமான வரித் துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனை நடத்த முயன்றபோது, அவரிடம் திமுகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக தொண்டர் குமார் என்பவரை பெண் அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது. திமுகவினர் தாக்கியதாகக் கூறி வருமான வரித் துறை அதிகாரிகள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News