சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடிநீர் கேன்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உரிய ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாதது, கேன் வாட்டரை சுத்தம் செய்து குடிநீரை விற்பனை செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் குடிநீர் தயாரிக்கும் கொண்டித்தோப்பு, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 6 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
உரிய அனுமதியுடன் குடிநீர் கேன் விநியோகம் செய்யவேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.