கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கோபால்சாமி, சிதம்பரம் நகரில் பனை நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் ராஜேஷ் என்ற நபர் கோபால்சாமியிடம் இலவசமாக நுங்கு கேட்டுள்ளார்.
கோபால் சாமி தர மறுத்ததால் அந்த நபர் அருகில் இருந்த அரிவாளை எடுத்து வெட்டிவிட்டு ஓடியுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது ராஜேஷ் மோதியுள்ளார்.
படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.