தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரையில் கஞ்சா வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சாத்தான்குளம் அருகே வேலன் புதுக்குளம் பகுதியில் தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பதாக கஞ்சா வியாபாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுமார் 50க்கும் மேற்பட்ட மூட்டைகளில் உள்ள 2500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.