தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மாணவர்கள் தேர்ச்சி வீதம் 96.42 சதவீதமும் மாணவிகள் 98.55 சதவீதம் என மொத்தமாக 97.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாணவ – மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் சென்னை அல்லது திருச்சியில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.