தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட போரூரை சேர்ந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோபி கண்ணன் போரூர் போலீஸ் நிலையத்தில் முதன்மை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசப்பட்ட வீடியோக்களை அதிக அளவில் பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

கோபி கண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில் இன்று கோபி கண்ணனை சஸ்பெண்ட் செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.