சென்னையில் புதிய மின்சார பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை, வியாசர்பாடியில் இன்று போக்குவரத்துத் துறை சார்பில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 47.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
இவை சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் இருந்து 145 பேருந்துகளும்,பெரும்பாக்கம் வழித்தடங்களுக்கு 135 பேருந்துகளும், பூந்தமல்லி வழித்தடங்களில் 125 பேருந்துகளும், வியாசர்பாடி வழித்தடங்களில் 120 பேருந்துகளும், தண்டையார்பேட்டை வழித்தடங்களில் 100 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.