புதுக்கோட்டையில் சவர்மா சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அங்கிருந்த 7 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள பிற சவர்மா கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News