நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு சிறையில் ஸ்பெஷல் கவனிப்பா..? அடுத்தடுத்து சிக்ககும் பிரபலங்கள்..!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பார் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் அடிதடி தகராறில் ஈடுபட்ட சிலரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி என்பது பின்னரே தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது., அதிமுக ஐ.டி.விங் நிர்வாகியான பிரசாத் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதும். நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், அவரிடம் செல்போனை பரிசோதனை செய்ததில்., நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்ததும். அவர் ஒரு கிராமிற்கு 13 ஆயிரம் ரூபாய் என 10 லட்சம் ரூபாய் வரை கொகைன் போதைப்பொருளை வாங்கியது தெரியவந்தது.

அதன் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த்திடம்., நேற்று காலை துணை கமிஷ்னர் ஜெயசந்திரன் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது போதைப்பொருள் ஏதும் பிடிபடாததால் அவரிடம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அதில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் அம்பலமானது.பின்னர் ஆதரங்களின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்., 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :

மேலும் போதைப் பொருள் தடுப்பு சட்டம் 1985-ன்படி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • 8சி – போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்தல் மற்றும் விற்பனை,
  • 22 போதைப் பொருள் பதுக்கி வைத்தல்,
  • 29(1) போதைப் பொருள் கடத்தல் மற்றும் உடந்தையாக இருந்து உதவி செய்வது,

27 கூட்டு சேர்ந்து போதைப் பொருள் கடத்துதல் மேற்கண்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

இதனிடையே ஸ்ரீகாந்த் தனது குடும்ப சூழ்நிலையை குறிப்பிட்டும்., நடித்த படத்திற்கு பணம் வழங்கப்படாத நிலையில் கொகைன் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு தான் அடிமையாக்கப்பட்டதாக குறிப்பிட்டு ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும் ஸ்ரீகாந்தின் தொடர்பில் உள்ள நடிகர் கிருஷ்ணா உள்பட நடிகர், நடிகையர்கள் பலர் இந்த போதைப்பொருளை பயன்படுத்தி இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். திரைத்துறையினர் பலரும் இந்த வழக்கில் சிக்கியிருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் ஸ்பெஷல் கவனிப்பு :

மேலும் இவருக்கு சிறையில் முதல் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு என்றால்.,சிறையில், கட்டில், தலையணை, கூடுதல் விளக்குகள், படிக்க செய்தித்தாள், மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி உணவுகள் ஆகியவை கொடுக்கப்படும்.

RELATED ARTICLES

Recent News