சமோசா சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் சமோசா சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், அனகாபல்லி கைலாச பட்டினத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பள்ளிக்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட சமோசாவை மாணவ, மாணவிகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சமோசா சாப்பிட்ட 27 பேருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அனகாபல்லி அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஜோஷ்வா, பவானி, ஸ்ரத்தா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 24 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அனகாபல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News