வடைக்கு சட்னி தராததால் கடைக்காரருக்கு வந்த பரிதாப நிலை..!

தூத்துக்குடி மாவட்டம் சங்கர் காலனியை சேர்ந்தவர் உதயசங்கர். இவர் மதுரை புறவழிச்சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவருடைய கடைக்கு 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வடை வாங்கிய அவர்கள் வடைக்கு சட்னி கேட்டுள்ளனர். சட்னி இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் உதயசங்கரிடம் தகராறு செய்துள்ளனர்.

பிறகு உதயசங்கரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயசங்கர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News