கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டின் 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வை கண்டித்து வாகன ஓட்டிகள் பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில் வருடாந்திர Fastag பாஸை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 60கிலோ மீட்டர் வரம்பிற்குள் 200 பயணங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்., இந்த வருடாந்திர பாஸ்டாக் பாஸ் மூலம் நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும்., இதன் கட்டணம் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த சேவையானது பிரத்தேயகமாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்துள்ளது..
பயனாளர்கள் நீண்ட நேரம் சுங்கசாவடிகளில் கட்டணங்கள் செலுத்த காத்திருப்பதால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதாகவும். சில சமயங்களில் விபத்துக்கள் நேர்வதால் இதனை கட்டுப்படுத்தவே இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த சேவை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும்., வருடாந்திர சேவை ரூ 3,000 கட்டி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது..