தற்போது எல்லாம் கணவன் மனைவி விவாகரத்து என்பது சாதாரணமாகி விட்டது. சினிமா பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதற்கு எடுத்தாலும் விவாகரத்து என கூறுகிறார்கள். அது அவர்களது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும் அவர்கள் கூறும் காரணங்களே நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அப்படிதான் இந்த பெண்ணும் விவாகரத்து கோரி சில காரணங்களை முன் வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷா. இவர் ஹாபூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கணவர் தன்னை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யவிடாமல் வேலை செய்ய சொல்லவதாக குறிப்பிட்டுள்ளார்.. இதனால் தனது இன்ஸ்ட்டா பாலோவர்ஸ் அக்கவுண்டில் 2 பேர் குறைந்துவிட்டதால் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்..
இதனையடுத்து காவல் நிலையம் வந்த அப்பெண்ணின் கணவர் விஜேந்தரம்., தனது மனைவி வீட்டு வேலைகள் செய்யாமல் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பாதாக புகார் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் கணவன் மனைவி இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.