கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து., லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 271 பேர் பயணித்த நிலையில் 270 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த கோர விபத்து உலகையே உலுக்கியது.
இந்த விபத்திற்கான உரிய காரணம் என்ன என்பது குறித்து அதிகரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது என்றால்., அதற்கான காரணங்கள் குறித்த தகவல்களை விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் சேகரித்து வைக்கப்படும்.
அந்த வகையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கடந்த ஜூன் 13ம் தேதி மீட்கப்பட்டது. தற்போது இந்த பெட்டி ஆய்விற்காக அமெரிக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு பெட்டி :
கருப்பு பெட்டி என்பது ஒவ்வொரு விமானம் மற்றும் எலிக்காப்டரிலும் பொருத்தப்பட்டிற்கும் ஒரு கருவி. இவை விமானம் மற்றும் எலிக்காப்டரில் ஏற்படும் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை ஒளிபரப்பிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விமானத்தின் வால் பகுதியில் பொறுத்தப்பட்டிற்கும் இந்த கருவியானது. விமானிகள் மற்றும் ஊழியர்களின் உரையாடல், விமானம் செல்லும் வேகம், அவை பறந்து செல்லக்கூடிய உயரம் மற்றும் அவற்றின் காலநிலை என அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கும்.
இதனை கடந்த 1950ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டேவின்வாரன் என்பவர் இதனை கண்டுபிடித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.