தொழிலும்., கல்வியிலும் முன்னோடியாக திகழ்ந்து வந்த கோவை மாவட்டம் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதாகவும். பயங்கரவாதத்தின் புகழிடமாக மாறிவருவதாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்., கடந்த 2022ம் ஆண்டு கோவை கோட்டிஷ்வரன் கோவிலில் அதிபயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இந்த விபத்து, வெடிவிபத்து அல்ல சிலிண்டர் விபத்து என திமுக அரசு கூறியதை சுட்டிக்காட்டி, தீவிரவாத அமைப்புகளை சார்ந்தவர்கள் தேசியப் புலனாய்வு அமைப்பினரால் கோவையில் கைது செய்யப்பட்டிருப்பது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “அரபுக் கல்லூரி” என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் கூட்டு சேர்ந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் செய்து அதிர்ச்சி அளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மறுபுறம் மாநகரில் கொலை, போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு கொடூர செயல்கள் அரங்கேறி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும்., இனியும் இவை தொடராமல் இருக்க தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..