சமீப காலமாக அமைச்சர்களின் இலாகாவில் தொடர்ச்சியாக மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பை, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை, துரைமுருகனுக்கு, வழங்கப்பட்டுள்ளது. மேலும், துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு ரகுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.