காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ம் ஆண்டு அக்டோபர் 02ம் தேதி பிறந்தார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளை கடைபிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007ல் அறிவித்தது.
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1930ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், “தன்னுடைய நாட்டில் விளைந்த பொருட்களுக்கு அன்னியர் வரி விதிப்பதா?” எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார். அதன் பின்னர் நடத்தப்பட்ட அனைத்து போராட்டங்களையும் அகிம்சை வழியிலேயே கையாண்டார்..
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக “ஆகஸ்ட் புரட்சி” என அழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது.
இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இவர் 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி புதுதில்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.. மறைந்த காந்தி தந்தை அடிகள் அன்றும் இன்றும்.. மக்களால் அகிம்சை அடிகள் என்று போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..