சூர்யா 45 படத்தின் டைட்டில்..!! 20 வருடங்களுக்கு பின் இணையும் அந்த ஜோடி..?

தமிழில் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. இவரது தந்தை, தம்பி, மனைவி என அனைவரும் நடிகர்களே. ஆனால் சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாலேமே உண்டு. குறிப்பாக பெண் ரசிகர்கள் கூட்டம்.

ஆறு, மௌனம் பேசியதே, சில்லுனு ஒரு காதம், சிங்கம்., மற்றும் ரெட்ரோ என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ரோமேன்டிக் ஹீரோவாக திகழும் சூர்யா., சில படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவருடன் ஜோடி சேரும் ஒரு சில ஹீரோயின்களை பார்க்கின்ற போது, ஆடியன்ஸ் மத்தியில் மீண்டும் இவர்கள் படம் நடிக்க மாட்டார்கள் என சொல்லவும் அளவிற்கு இருக்கும்.

அந்த வகையில் தான் சூர்யா 45 படம் அமைந்துள்ளது. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இதில் நடிகை த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி சுப்பிரமணியம், ஷிவதா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

சூர்யா மற்றும் த்ரிஷா ஆகியோர் இதற்கு முன் ஆறு, மௌனம் பேசியதை, ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் 20 வருடங்களுக்கு பின் இவர்களின் காம்போ இணைந்துள்ளது.

மேலும் இப்படத்தின் டைட்டில் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி இப்படத்திற்கு “கருப்பு” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..

RELATED ARTICLES

Recent News