மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி ஒரு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில்., அவ்வழக்கின் குற்றவாளிகளான திரிணமுல் காங்., மாணவர் பிரிவு நிர்வாகியுமான மோனோஜித் மிஸ்ரா, ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்., பாலியல் இச்சசைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதியானது.. இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக சொல்லலப்படும் மேங்கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகிறது..
மேலும் அவர் குறித்து சக மாணவர்கள் கூறிய தகவலின் படி., மனோஜித் மிஸ்ரா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதுடன்., பாலியல் வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு மிக மோசமான நபர் என்றும் குற்றம்சாட்டினர்.
அதுமட்டுமின்றி, பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது., மாணவர்களை தாக்குவது., மிரட்டி பணம் பறிப்பது., அனைவரையும் உடல் ரீதியாகவும்., மன ரீதியாகவும் மற்றவர்களை துன்புறுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மிஸ்ராவின் நடவடிக்கைகள் குறித்து பலமுறை கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தும்., நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் காவல்துறையினராவது மிஸ்ரா மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு., தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்..