2024-25ம் ஆண்டில் பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
இத்திட்டத்தில், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18ம் தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப்படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில், மழையால் ஏற்பட்ட பயிர்
சேதத்திற்காக 14 கோடியே 55 இலட்சம் ரூபாய் 9,988 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் உடனடியாக வழங்கப்பட்டதாக கூறிய அவர், 2024-2025ம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.