சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (அக்.29) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர் செம்மொழி பேசுகையில், மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை எனவும், இதனை மாநகராட்சி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரிடம் பேசி இருப்பதாகவும், இதற்கு ஒப்பந்த புள்ளி கோரக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.