ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர் இப்படத்தை நிதிஷ் திவாரி இயக்குகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு காப்புரிமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ராமாயணம் படத்துக்கான காப்புரிமை தங்களிடம் இருப்பதாகவும் அதை மீறி யாரும் படத்தை எடுக்க கூடாது என்றும் தயாரிப்பாளர் மது மண்டேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக ராமாயணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.