ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறும் படி., அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நீடித்து வருகிறது.. இதுவரையில் 3000 மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனிடையே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே 4வது நாளாக ராணுவ மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே தாக்குதல் நீடித்து வருவதால்., டெஹ்ரானில் இருந்தும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் பொதுமக்களை வெளியேறும் படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கனடா நாட்டில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்க அதிபர் ட்ரம்ப் புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக இதுதொடர்பான பிரத்யேக அறிவிப்பையும் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.. அதில்., தான் கையெழுத்திட இருந்த ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
ஈரான் அணுஆயுதத்தை வைத்திருப்பதை சுட்டிக்காட்டி., இதுபோன்ற வெட்கக்கேடான விஷயங்களை எந்த நாடும் அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்., மக்கள் உயிர் மேல் கொண்ட அக்கறையால் அவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவவிட்டிருப்பதாக தெரிவித்தார்…