பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!! தாயின் முகத்திரையை கிழித்த போலீஸ்..!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண், பாரதி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இன்று காலை பாரதி திடீரென தனது குழந்தையை காணவில்லை என கூச்சலிட்டு அழுதுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பாரதியின் உறவினர்கள்., என்ன நடந்தது என்பது குறித்து கேட்டுள்ளனர். அப்போது தான் குழந்தையை தூங்க வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக பாரதியிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் போலீசார் பாணியில் விசாரணை நடத்தப்பட்ட போதே பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அருண் பாரதி தம்பதியினருக்கு பிறந்த இரட்டை குழந்தையில்., பெண் குழந்தை மிகுந்த உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பாரதி., தன்னுடைய குழந்தையை கொன்று கட்டைப்பையில் வைத்து தூக்கி வீசியுள்ளார்.

பின்னர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயே பெற்ற குழந்தையை கொலை செய்து வீசிவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News