ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி? வெளியான தகவல்கள்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

11 பேரில் ஒருவர் ரவுடி திருவேங்கடம்(33) குன்றத்தூர் பெரியார் நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர்.

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருவேங்கடம் பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சரவணன் விசாரணைக்காக மாதவரம் ஆடுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ரவுடி திருவேங்கடம் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் மாதவரம் ஆடுத்தொட்டியை சுற்றியுள்ள பகுதியில் தேடிவந்தனர்.

இந்த நிலையில் புழல் வெஜிட்டேரியன் வில்லேஜ் பகுதியில் உள்ள காலி இடத்தில் உள்ள ஒரு தகர கொட்டாயில் ரவுடி திருவேங்கடம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தகர கொட்டாயை சுற்றி வளைத்து திருவேங்கடத்தை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதால் ஆய்வாளர் முகமது புகாரி தற்காப்புக்காக திருவேங்கடம் மீது துப்பாக்கியால் சுட்டார்.

இதில் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் குண்டுகள் பாய்ந்து அவர் பலத்த காயம் அடைந்தார். போலீசார் திருவேங்கடத்தை மீட்டு சிகிச்சைக்காக மாதவரத்தில் உள்ள மெரிடியன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதன் பிறகு திருவேங்கடம் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதால். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News