சென்னை தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி சௌமியா(18) நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் மாணவிக்கு அவ்வப்போது உடல் நிலை சரியில்லாமல் போவதால் அவரது தந்தை செலவு செய்ய முடியால் திட்டி கொண்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இனிமேல் செலவு வைக்கமாட்டேன் என்று உருக்கமாக சௌமியா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.