மருமகளை உறவுக்கு அழைத்த மாமியார்.. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியை சேர்ந்தவர் அலோக் உபத்யாய். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும், கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது அந்த இளம்பெண், காவல்துறையில் புகாா் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும், தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

மேலும், தனது மாமியார் தன்னுடன் உறவில் ஈடுபட வற்புறுத்தினார் என்றும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், பிளேடால் தன்னை தாக்கினார் என்றும் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, வரதட்சனை கேட்டு, அவர்கள் தொடர்ச்சியாக அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News