பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 800 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், “ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள். இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அதில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News